இங்கிலாந்து சாம்பியன்
அதுவும் சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் வெற்றி என்ற அடிப்படையில் இங்கிலாந்து புதிய உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடாக இருந்தாலும், 44 ஆண்டு உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்துக்கு இதுவே முதல் கோப்பை.
உற்சாக கொண்டாட்டம்
அதனால் அணியின் வீரர்கள் அனைவரும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருந்தனர். கொண்டாட்டம் முடிவடைவதற்குள், டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் தனது அடுத்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கினார்.
ஆஷஸ் தொடர்
ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கவிருக்கும் ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பரம எதிரிகளான இவ்விரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டி என்றால் ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்கும்.
உயரிய இலக்கு
அதனால் உலக கோப்பையை விட ஆஷஸ் போட்டியை வெல்வதே எங்களுக்கு மிக உயரிய இலக்கு என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
ஆஷஸ் கோப்பை வேண்டும்
2019ம் ஆண்டு எங்களுக்கான ஆண்டு. உலக கோப்பையை தட்டிச் சென்றது போல் ஆஷஸ் கோப்பையையும் வெல்வோம். அதற்காக ஒவ்வொரு வீரர்களும் களத்தில் இறங்க உள்ளனர். உலக கோப்பையை வென்ற அதே உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடர்களில் எதிர்கொள்வோம் என்றார்.