For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராபிக் போலீசாரை தாக்கிய பாக். கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு ஜாமீன்

By Mathi

இஸ்லாமாபாத்: போக்குவரத்து போலீஸாரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான உமர் அக்மல், போக்குவரத்து போலீசை தாக்கியதாக நேற்று கைது செய்யப்பட்டார். லாகூரில் மார்க்கெட் பகுதியில் உமர்அக்மல் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே மோதல் நிகழ்ந்துள்ளது.

Pakistan batsman Umar Akmal released on bail

இதனால் போலீசாரை தாக்கியதாக அக்மல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று பிரிவுகளில் அக்மல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி தமது ஜாமீனை உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார் அக்மல்.

இதனால் அவர் திங்கள் அன்று மாஜிஸ்திரேட்டு முன் ஆஜராகி தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை உறுதி செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Story first published: Sunday, February 2, 2014, 17:31 [IST]
Other articles published on Feb 2, 2014
English summary
Pakistan batsman Umar Akmal was released from jail after spending an entire day in lock-up for allegedly thrashing a traffic warden and tearing his uniform after being stopped for violating a signal here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X