For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியருக்கு பந்தை பரிசளித்த பாகிஸ்தான் வீரர் -பிபிஎல் தொடரில் நெகிழ்ச்சி சம்பவம்

விக்டோரியா : ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்று ஆடிய பாகிஸ்தான் வீரர் ஹாரீஸ் ரவூப், தான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதை கொண்டாடும்வகையில், போட்டி பந்தை இந்தியர் ஒருவருக்கு பரிசளித்தார்.

தான் பங்கேற்று ஆடிவரும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக பந்து வீசிய ஹாரீஸ் ரவூப், எதிரணியான ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணி வீரர்கள் ஐந்து பேரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதன்மூலம் தன்னுடைய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வழிகோலினார்.

முன்னதாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக தான் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் சேர்ந்து ஹாரீஸ் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்

பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரில் பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் ஹாரீஸ் ரவூப் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தென்னாப்பிரிக்க வீரருக்கு மாற்று

தென்னாப்பிரிக்க வீரருக்கு மாற்று

பிக் பாஷ் லீக் தொடரில் எந்த அணியும் ஹாரீஸ் ரவூப்பை முதலில் தேர்ந்தெடுக்கவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணி வீரர் டேல் ஸ்டெயின் விலகிய நிலையில் ரவூப் அவருக்கு மாற்றாக களமிறங்கினார்.

3வது போட்டியில் 5 விக்கெட்டுகள்

3வது போட்டியில் 5 விக்கெட்டுகள்

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய ஹாரீஸ் ரவூப், தான் பங்கேற்று விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் 3வது போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அணியின் வெற்றிக்கு உறுதுணை

அணியின் வெற்றிக்கு உறுதுணை

மெல்போர்ஸ் ஸ்டார்ஸ் அணியுடன் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணி மோதிய இந்த போட்டியில் பந்துவீசிய ஹாரீஸ் ரவூப், 27 ரன்களை மட்டுமே கொடுத்து அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வழிவகை செய்தார்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி

5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்திய ஹாரீஸ் ரவூப், அதன் நினைவாக தான் வீசிய பந்தை, இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த பாதுகாவலர் ஒருவருக்கு பரிசளித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பிபிஎல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பந்தை அளித்த ரவூப்

பந்தை அளித்த ரவூப்

தான் போட்டிக்கு வந்தபோது, தான் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று கூறியதை அடுத்து, அந்த இந்திய பாதுகாவலர் தன்னை கட்டியணைத்து, கண்ணீர் விட்டதாக தெரிவித்த ரவூப், அதன் காரணமாகவே தான் பந்தை அவருக்கு பரிசளித்ததாக தெரிவித்தார்.

Story first published: Monday, December 23, 2019, 20:20 [IST]
Other articles published on Dec 23, 2019
English summary
Big Bash League : Pakistan bowler gifts his ball to Indian security guard
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X