கிறிஸ் கெயில் ஆட்டம்
வங்கதேச பிரீமியர் லீக்கில் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் விளையாடி வருகிறார்.
கிறிஸ் கெயில் பாராட்டு
பாகிஸ்தான் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளதாக மேற்கிந்திய தீவுகளின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் தாக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
கிறிஸ் கெயில் மகிழ்ச்சி
பாகிஸ்தானில் விளையாட செல்லும் வீரர்களுக்கு முதல்தர பாதுகாப்பை வழங்குவதாக கூறப்படும் நிலையில் வங்கதேசத்தை போல பாதுகாப்பான கைகளில் வீரர்கள் உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
"பாதுகாப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது"
10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதையடுத்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மணி, பாகிஸ்தானின் பாதுகாப்பு தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்தியாவை வம்புக்கு இழுத்த மணி
தொடர்ந்து பேசிய மணி, தற்போது பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் பாதுகாப்பு குறைபாடு அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அழைப்பு
மேலும் இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.