லண்டன்:ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை, விராட் கோலியுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசி இருக்கிறார்.
உலக கோப்பை தொடர் வரும் வியாழக்கிழமை முதல் இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ள அணிகள், தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றன.
உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர் கொள்கிறது. ஜூன் 5ம் தேதி இந்த போட்டி நடக்கிறது. அதற்கு முன்னதாக முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் விளையாடி, இந்தியா தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை, விராட் கோலியுடன் ஒப்பிட்டு புகழ்ந்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
பாபர் ஆசம் ஒரு சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி. பாகிஸ்தான் அணி அரையிறுதி அல்லது இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இவர் போன்ற இளம் வீரர்களின் பங்களிப்பு ரொம்ப அவசியம் என்றார்.