ஆச்சரியமாக இருக்கும்
பாட் கம்மின்ஸ் கூறுகையில், "அவர் செய்தியாளர்களிடம் தான் எந்த வம்பும் செய்ய மாட்டேன் என கூறியதாக தெரிகிறது. அவர் அப்படி செய்யாமல் இருந்தால் எனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கும்" என கூறியுள்ளார். கோலியால் அமைதியாக இருக்க முடியாது என அடித்துக் கூறுகிறார் கம்மின்ஸ்.
சரிவில் ஆஸ்திரேலியா
எனினும், ஆஸ்திரேலிய அணி இப்போது வம்புக்கோ, உரசல்களுக்கோ இடம் அளிக்கும் நிலையில் இல்லை. அவர்கள் கடும் தோல்விப் பாதையில் இருக்கிறார்கள். எனவே, அவர்களாக பிரச்சனைகளை ஆரம்பிப்பார்கள் என நினைக்க முடியாது. பந்து சேத விவகாரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடுமையான பின்விளைவுகளை சந்தித்துவிட்டது.
இனி அனல் பறக்காது
பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா போட்டி போட்டு ஆடும். ஆனால், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கடந்த சில ஆண்டுகள் முன்பு இருந்தது போல கடும் அனல் பறக்கும் வகையில் அது இருக்காது என குறிப்பிட்டார்.
கடந்த கால ஆஸ்திரேலிய சர்ச்சைகள்
பாட் கம்மின்ஸ் மறைமுகமாக குறிப்பிடும் சம்பவம், கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியின் போது ரிவ்யூ கேட்பதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் அறையை உதவிக்காக பார்த்தார். இதற்கு கோலி கடும் எதிர்வினை ஆற்றினார். இது மட்டுமின்றி, இதற்கு முன்பும், இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகள் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. ஹர்பஜன் - சைமண்ட்ஸ் சர்ச்சை தான் இதில் மிகப் பெரியது. கோலியும் ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனால், இந்த முறை இரண்டு அணிகளுமே சர்ச்சைகள் வராமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கும் என தெரிகிறது. ஆனால், கோலியால் களத்தில் அமைதியாக இருக்க முடியுமா?