சேலம்
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் இவரின் தாய் ரோட்டுக்கடை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி உள்ள நடராஜன் சேலத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இவர் தொடர்ந்து வாய்ப்பு பெறுவார் என்றும் கருதப்படுகிறது.
வாய்ப்பு
இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி தமிழகம் திரும்ப உள்ள நடராஜனுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்க சின்னப்பம்பட்டி கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். பேருந்து நிலையத்தில் இருந்து மேள தாளங்களுடன் இவருக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
வரவேற்பு
இதை காணும் ஆவலோடு அவர் தமிழகம் திரும்புகிறார். இதற்காக சேலத்தில் பல இடங்களில் பெரிய அளவில் கட் அவுட் பேனர்கள் வைக்கப்பட்டு நடராஜனை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேள தாளங்கள் முழங்க உடலில் தேசிய கொடி போர்த்தியபடி சாரட் வண்டியில் மக்கள் வெள்ளத்தில் நடராஜன் மிதந்தப்படி வந்தார்.
|
ஏன் மறுப்பு
நடராஜனை காண மக்கள் பலரும் கூடுவார்கள். கூட்டம் அதிகம் ஆகும். கொரோனா காலத்தில் இது சிக்கலாகும். நடராஜனுக்கு இது சிக்கலாகும் வாய்ப்பு உள்ளது. அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி உள்ளதால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.