எப்படி
ஆஸ்திரேலிய தொடரில் இவர் இணைந்து சில நாட்களில் இவரின் அப்பா மரணம் அடைந்தார். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சிராஜை கிரிக்கெட் ஆட ஊக்குவித்தது இவரின் அப்பாதான். அப்பாவின் மரணத்திற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் தங்கி ஆடிய சிராஜ் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
நம்பிக்கை
இந்த நிலையில் சிராஜ் தனது தாயார் குறித்து முக்கியமான விஷயம் ஒன்றை இன்றைய போட்டிக்கு பின் பகிர்ந்து உள்ளார். அதில். இந்திய அணியில் என் அப்பாவின் மரணத்திற்கு பின் மனதளவில் நான் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன். எனக்கு ஆட்டம் மீது கவனம் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
கஷ்டம்
இந்தியாவிற்கு திரும்புவது குறித்தும் யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் என் அம்மாவிடம் பேசிய பின் நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். அந்த போன் கால்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. என் அம்மா எனக்கு நம்பிக்கை கொடுத்தார். எனக்கு மன ரீதியான நம்பிக்கை என் அம்மாதான் எனக்கு வழங்கினார்.
அம்மா
என் அம்மாவிடம் இருந்து வந்த அந்த போன் கால்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இப்போது நான் விக்கெட் எடுக்கவும் இதுவே காரணம். எனக்கு ஆதரவு அளித்தவர்கள், உறுதுணையாக நின்றவர்கள், வாய்ப்பு கொடுத்தவர்கள் எல்லோருக்கும் நன்றி என்று சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.