|
சேவாக்கின் டுவீட் பதிவு
உலக கோப்பையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சேவாக்கின் இந்த பழைய ட்வீட்டை தேடி கண்டு பிடித்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் டிவி பிரபலம் மோர்கன். அந்த டுவிட்டுக்கு இப்போது பதிலளித்து வம்பிழுத்திருக்கிறார் அவர்.
|
நண்பா
அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது: ஹாய் நண்பா என்று தமது டுவீட்டை தொடங்கி இருக்கிறார். அதற்கு இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து பெற்றது ஒரு வெற்றியே அல்ல என்று கிண்டல் செய்து மோர்கனை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
242 இலக்கு
முன்னதாக, நியூசி. இங்கிலாந்து இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக கோப்பை இறுதியில் இங்கிலாந்து முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. முதலில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தின் 241 ரன்னை இங்கிலாந்து எடுத்ததால் ஆட்டம் டிராவானது.
பவுண்டரிகள் கணக்கு
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதனால், ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரியை எந்த அணி அடித்தது என்று கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்து அதிகமாக பவுண்டரிகள் எடுத்திருந்ததால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூசிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன.