ரசிகர்கள் அதிர்ச்சி
இதைத் தொடர்ந்து 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது. மேலும் பேட்டிங், பீல்டிங், பவுலிங் உள்ளிட்டவற்றில் இந்தியா சொதப்பியது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மட்டும் அல்ல
இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவிக்கையில், இந்த வெற்றியானது இன்று மட்டுமோ, நாளை மட்டுமோ கொண்டாட வேண்டியது அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலங்களுக்கு இந்த வெற்றி நீங்கா இடம் பெற்றிருக்கும்.
நாங்களும் சாம்பியன்தான்
நீண்ட நாள்களாக துபாயை சொந்த கிரவுண்டாக கொண்டு விளையாடி வருகிறோம். இப்போது நாங்களும் சாம்பியன்தான்.
உற்சாகமாக உள்ளது
இந்த வெற்றியால் பாகிஸ்தானுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். எனவே மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.