12 நகரங்கள்
மொத்தம் 12 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஐதராபாத், மும்பை, பாட்னா, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன.
சென்னையில் தொடக்கம்
அடுத்த கட்டமாக சென்னையில், இந்த போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. வரும் 23ம் தேதிவரை, சென்னையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோதா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
மல்லுக்கட்டிய வீரர்கள்
துவக்கம் முதல் புள்ளிகள் பெற இரு அணி வீரர்களும் ஆர்வம் காட்டினர். ஒருத்தருக்கு ஒருவர் படு பயங்கரமாக மல்லுக்கட்டினர். ஒரு கட்டத்தில் உ.பி.யோதா அணி முன்னிலை பெற்றது.
ஆதிக்கம்
இதையடுத்து முதல் பாதியின் முடிவில் யோதா அணி 16 - 10 என 6 புள்ளிகள் முன்னிலை பெற்றது. பரபரப்பாக துவங்கிய 2வது பாதியிலும் யோதா அணி வீரர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.
வீழ்த்தியது
கடைசி வரை ஜெய்ப்பூர் அணி வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனாலும் யோதா அணி வீரர்களின் ஆட்டத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில், உ.பி.யோதா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்த்தர்சை 31 - 24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.