4வது டி20
இரு அணிகளும் மோதும் 4வது டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு ராஜ்கோட் பகுதியில் நடைபெறவுள்ளது. தொடரை கைப்பற்றிவிட வேண்டும் என தென்னாப்பிரிக்க அணியும், சமநிலை படுத்த வேண்டும் என இந்திய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.
எய்டன் மர்க்ரம் விலகல்
இந்த போட்டி குறித்த முதல் நல்ல விஷயம் நேற்று தெரியவந்தது. அதாவது தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் எய்டன் மர்க்ரமுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொடரில் இருந்தே வெளியேறினார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக சென்றது. இந்திய ரசிகர்களும் நிம்மதியடைந்தனர்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனிங் வீரர் குயிண்டன் டிகாக் கடந்த 2 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். காயம் காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் அவர் குணமடைந்துவிட்டதாகவும், 4வது டி20ல் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு தலைவலி
இந்திய களத்தில் குயிண்டன் டிக்காக் இந்திய அணிக்கு எமனாக விளங்கக்கூடியவர். ஐபிஎல் தொடர் மூலம் அவருக்கு இந்திய பவுலர்கள் குறித்தும், பிட்ச்-கள் குறித்தும் நல்ல புரிதல் உள்ளன. எனவே நிச்சயம் இந்திய அணிக்கு அவர் அச்சுறுத்தலாக இருப்பார் எனத் தெரிகிறது.