அஸ்வின் அசத்தல்
இந்திய அணியில் கோலியை தவிர மற்ற வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறிய நிலையில் லோ ஆர்டரில் களமிறங்கி அசத்தல் சதமடித்தார். குறிப்பாக இங்கிலாந்து ஸ்பின்னர்ஸுக்கு எதிராக அவர் ஆடிய விதம் அனைவரையும் வியக்கவைத்தது.
பவுலிங்
முன்னதாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ரன்குவிப்புக்கு அஸ்வின் மிகப்பெரும் சவாலாக இருந்தார். மொத்தம் 23.4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குற்றச்சாட்டு
சென்னை பிட்ச் மிகவும் மோசமான ஒன்று எனவும் இதில் வெற்றி பெற்றால் ஆச்சரியம் இல்லை எனவும், இங்கிலாந்து அணி வீரர்களும் முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், மார்க் வாக் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.
பதிலடி
இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், அஸ்வினின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. பிட்ச் சரியில்லை என குற்றம்சாட்டியவர்களுக்கு அஸ்வினின் சதம் பதிலளித்துள்ளது. குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவரின் ஆட்டம் நம்பிக்கை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கேள்வி
சிலர் இந்திய கிரிக்கெட்டை பற்றி புகார் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே வந்துள்ளோம். சென்னை பிட்ச் மோசம் என்றால், எப்படி முதல் டெஸ்டில் இங்கிலாந்து அடித்ததை விட 2வது டெஸ்டில் இந்தியா அதிக ஸ்கோர் அடித்திருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.