மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித் நீக்கப்பட்டதை அடுத்து அப்பதவிக்கு ரஹானே நியமனம் செய்யப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை பேன் கிராஃப்ட் சேதப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. இதுகுறித்து தகவலறிந்த ஐசிசி அணியின் கேப்டன் ஸ்மித்தையும், துணை கேப்டன் வார்னரையும் அப்பதவியிலிருந்து நீக்கியது.
இந்நிலையில் 2018-ஆம் ாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் ஸ்மித் இருந்தார். பந்து சேத விவகாரத்தில் அவரை அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதில் இந்திய வீரர் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.