கேப்டன்சி
ரஹானேவின் சிறப்பான கேப்டன்சி மூலம் இந்திய அணி இந்த தொடரை வென்றது . 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வாஷ் அவுட் ஆகும் என்று பலரும் கணித்து இருந்தனர். இந்த நிலையில் கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி இந்திய அணி தொடரை வென்று கோப்பையை தக்க வைத்துள்ளது.
யார் இனி கேப்டன்
இந்த தொடர் வெற்றி காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக ரஹானேவை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ரஹானே சிறப்பாக கேப்டன்சி செய்கிறார். இவரை அணியின் நிரந்தர கேப்டனாக நியமிப்பது, இந்திய அணியின் எதிர்காலத்திற்கு சிறப்பானதாக இருக்கும்.
எதிர்காலம்
அதோடு ரஹானே கேப்டனானால், கோலியின் டென்ஷன் குறையும். இதனால் கோலி இன்னும் எளிதாக பேட்டிங் செய்ய முடியும். இந்திய அணிக்கு இது பெரிய வகையில் பலன் அளிக்கும் என்று சிலர் கூறியுள்ளனர்.
என்ன சொன்னார்கள்
பிசிசிஐ அதிகாரிகள் சிலரும் கூட இந்த விஷயத்தை குறிப்பிட்டு உள்ளனர். இதனால் இந்திய அணிக்குள் ரஹானே vs கோலி என்ற பிம்பம் ஏற்கனவே உருவாகிவிட்டது. ஆனால் ரஹானே தனக்கு சண்டையே வேண்டாம் என்று பின்வாங்கி உள்ளார். அதன்படி, எனக்கு கேப்டன்சியில் விருப்பம் இல்லை.
விருப்பம் இல்லை
கோலி செய்ததை இந்திய அணிக்காக நானும் செய்தேன். என்னுடைய ஒரே நோக்கம் இது மட்டுமே. கேப்டன் பதவி எல்லாம் என்னுடைய நோக்கமே கிடையாது, என்று ரஹானே மிகவும் பெருந்தன்மையாக குறிப்பிட்டுள்ளார்.
கோலி செய்ததை செய்தேன்
கோலி செய்ததை இந்திய அணிக்காக நான்கும் செய்தேன். என்னுடைய ஒரே நோக்கம் இது மட்டுமே. கேப்டன் பதவி எல்லாம் என்னுடைய நோக்கமே கிடையாது, என்று ரஹானே மிகவும் பெருந்தன்மையாக குறிப்பிட்டுள்ளார்.