மாற்று வீரர்
இந்த நிலையில் மாற்றுவீரர் குறித்து பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ் தீபக்சாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் முகமது ஷமி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் அவருடைய எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்துள்ளார் .
ஷமிக்கு என்ன ஆச்சு
அதில் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு தான். இருப்பினும் மற்ற வீரர்களுக்கு இதை வாய்ப்பாக நான் கருதுகிறேன். முகமது ஷமி மாற்று வீரராக அறிவிக்கப்படுவாரா என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த அவர் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்.
அக்.15ஆம் தேதி முடிவு
முகமது ஷமி தொடர்பான மெடிக்கல் ரிப்போர்ட் எங்களுக்கு கிடைத்தவுடன் தான் பும்ராவுக்கு பதில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். பும்ராவுக்கு பதில் யார் என்பது குறித்து முடிவெடுக்க அக்டோபர் 15ஆம் தேதி வரை காலம் இருக்கிறது. நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மாற்றுவீராக வருபவர் நன்றாக பந்து வீச வேண்டும். உங்களால் எதை சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
யாருக்கு வாய்ப்பு
இந்திய அணி இன்னும் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசும் வீரரை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தற்போது வரை ஆர்ஸ்தீப் சிங், ஹர்சல் பட்டேல் , புவனேஸ்வர் குமார் ஆகியோர் மட்டுமே இருக்கின்றனர். ரிசர்வ் வீரரின் இடம் பெற்றுள்ள தீபக்சாகர் பேட்டிங் பந்துவீச்சு என கலக்குகிறார். இந்த நிலையில் அவர் மெய்ன் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. எனினும் அனுபவம் வாய்ந்த முகமது ஷமிக்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.