தோல்வியிலும் நன்மை
ஆனால், இந்த தோல்வியிலும் நன்மை இருப்பதாக முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவனுமான ராகுல் டிராவிட் குறிப்பிடுகிறார். இந்தியா நேரடியாக உலகக்கோப்பை சென்று விடுவது போன்ற சில பேச்சுக்கள் இருந்தன. எனவே, இந்த தோல்வி நல்லது தான். இது நாம் மிக மிக நன்றாக ஆட வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது என டிராவிட் கூறினார்.
உழைத்தால் தான் வெற்றி
உலகக்கோப்பை தொடர் வரும் மே 30 முதல் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அந்த தொடரில் இந்தியா வெற்றி பெறும் என பல நாட்டு வீரர்களும் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்தியா கடுமையாக உழைத்தால் தான் வெல்ல முடியும் என்பதே டிராவிட்டின் கருத்தாக உள்ளது.
அணியில் குழப்பங்கள்
உண்மையில் இந்தியா இன்னும் சரியான அணியை தேர்வு செய்யவில்லை. அணித் தேர்வில் பல குழப்பங்கள் உள்ளன. மிடில் ஆர்டரில் இவர்கள் தான் ஆடுவார்கள் என கூற முடியாத நிலையே இன்று வரை உள்ளது.
மீள்பார்வை தேவை
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற்று இருந்தால், உலகக்கோப்பைக்கு அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையுடன் சென்று இருக்கும். தற்போது தோல்வி அடைந்துள்ளதால், இந்திய அணி குறித்து மீள்பார்வை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அனுபவம் பேசுகிறது
ராகுல் டிராவிட் ஆஸ்திரேலிய தொடரில் கிடைத்த தோல்வி நல்லதுதான் என அவரது அனுபவத்தில் இருந்து கூறியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா தோல்விகளை சந்தித்து இருந்தது. உலகக்கோப்பை தொடரிலும் துவக்கத்தில் தோல்விகளை சந்தித்து, பின்னர் அதில் இருந்து மீண்டு இறுதிப் போட்டி வரை சென்றது.