For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பமே இப்படியா??.. கடுப்பான மைதான ஊழியர்கள்.. இந்தியா - அயர்லாந்து முதல் டி20 போட்டியில் சோதனை!

வில்லேஜ்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

 Rain interrupted in India vs ireland 1st t20 match

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று டப்ளிங் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அயர்லாந்து தொடருக்கு இப்படி தான் அணி வேண்டும்.. இன்றைய பிளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்அயர்லாந்து தொடருக்கு இப்படி தான் அணி வேண்டும்.. இன்றைய பிளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்

இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு போட்டிக்கான டாஸ் போடப்படுவதாக இருந்தது. எனினும் மாலையில் இருந்து டப்ளின் நகரம் முழுவதும் மழை பெய்து வந்ததால், டாஸானது 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது. அதன்பின்னர் டாஸ் போடப்பட்டு இந்திய அணிக்கு சாதகமாக சென்றது.

இந்நிலையில் டாஸ் போடப்பட்ட போதும், போட்டி தொடங்காததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஃபீல்டிங்கிற்காக அயர்லாந்து வீரர்கள் களமிறங்க தயாரான உடனே மீண்டும் மழை குறுக்கிட்டது. டாஸுக்கு பிறகு மைதானத்தை மூடி வைத்திருந்த கவர்களை ஊழியர்கள் அவசர அவசரமாக நீக்கினர். எனினும் மீண்டும் மழை வந்தவுடனே அவசர அவசரமாக கவர் செய்தனர்.

அயர்லாந்து நாட்டின் வானிலை ஆராய்சி மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று இரவு 70 -80 சதவீதம் வரை மழைப்பொழிவு இருக்கும் என்பதால் போட்டி பெரியளவில் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தற்போது கடும் மழைப்பொழிவு இருப்பதால் முழு போட்டியுமே பாதிப்படையும் நிலை உள்ளது.

Story first published: Sunday, June 26, 2022, 21:43 [IST]
Other articles published on Jun 26, 2022
English summary
India vs ireland t20 match ( இந்தியா vs அயர்லாந்து டி20 போட்டி ) அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மழைக்குறுக்கிட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X