பைன் போதாது
நடுவரிடம் சண்டை போட்டதற்காக, தோனிக்கு 50 சதவீதம் பைன் போட்டது ஐபிஎல் நிர்வாகம். அந்த பைன் போதாது என்று முன்னாள் வீரர்களும் தம் பங்குக்கு கொதித்து எழுந்தனர்.
|
சுவாரசிய சம்பவம்
இந்நிலையில் அந்த போட்டியின் போது நடந்த சுவாரசிய சம்பவம் தற்போது வைரலாகி உள்ளது. அந்த போட்டியின் முடிவில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வலம் வந்தது.
ஸ்டைல் சிறுவன்
அந்த புகைப்படத்தில் தோனி நின்று கொண்டிருக்கிறார். அவருடன் 8 வயது சிறுவனும் நின்று கொண்டிருக்கிறார். இருவரும் ஸ்டைலாக அந்த போட்டோவில் தெரிகின்றனர். இந்த போட்டோ 2010ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
தோனியுடன் போட்டோ
இப்போது அந்த போட்டோவுக்கு, அருகில் வேறு ஒரு போட்டோ வைக்கப்பட்டு உள்ளது. அந்த போட்டோ... ராஜஸ்தான் அணியுடனான போட்டியின் போது எடுக்கப்பட்டது. அதில் தோனியுடன் இளைஞர் ஒருவர் நிற்கிறார். ரியான் பாரக் என்பவர் அந்த இளைஞர் தான் கூறப்பட்டுள்ளது.
அறிமுக வீரர் பராக்
8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் பராக் தான்.. இப்போது ராஜஸ்தான் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கி உள்ளார். முதல் போட்டியில் விளையாடும் முன்பாக தோனியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இணையத்தில் வைரல்
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் இணையத்தில் வைரலாகி உள்ளது. தோனியின் ரசிகர்கள் பராக்குக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.