For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடந்த சீசனை போலவே சிஎஸ்கேவுக்கு அடுத்தடுத்த சோதனை... மீண்டு வருமா 'தல' டீம்?

டெல்லி : கடந்த சீசனில் ப்ளே-ஆப்பிற்கு முன்னேறாமல் சிஎஸ்கே அணி வெளிவந்தது. ஆனால் முதலில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பே அந்த அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் கொரோனா தாக்கத்தில் சிஎஸ்கே அணி சிக்கியுள்ளது.

அடுத்தடுத்த 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி பௌலர்... 38 வயசுலயும் ரோகித்துக்கு எதிரா சாதனை! அடுத்தடுத்த 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி பௌலர்... 38 வயசுலயும் ரோகித்துக்கு எதிரா சாதனை!

அந்த அணியின் பௌலிங் கோச் பாலாஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மட்டுமின்றி சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தள்ளி வைக்கப்பட்ட போட்டி

தள்ளி வைக்கப்பட்ட போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையிலான போட்டி கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாளைய போட்டியில் சிக்கல்

நாளைய போட்டியில் சிக்கல்

இந்நிலையில் இன்றைய போட்டியில் எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதவுள்ள நிலையில் நாளைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவின் பௌலிங் கோச் பாலாஜிக்கு கொரோனா பாதித்துள்ளதையடுத்து இந்த சிக்கல் நிலவுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட அணி

தனிமைப்படுத்தப்பட்ட அணி

பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சிஎஸ்கே அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சிஎஸ்கே -ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான நாளைய போட்டியும் ஒத்திவைக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி நடக்கும்

திட்டமிட்டபடி நடக்கும்

ஆனால் டெல்லியில் நடைபெறவுள்ள இன்றைய எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்றும் பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஎஸ்கேவின் பயிற்சி முகாமும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தொடர் பரிசோதனை

தொடர் பரிசோதனை

கடந்த போட்டியில் டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதியது. நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிருந்த நிலையில், தற்போது கோச்சுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பையடுத்து அணி வீரர்களுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Story first published: Tuesday, May 4, 2021, 13:22 [IST]
Other articles published on May 4, 2021
English summary
CSK's training session has been cancelled as a precautionary measure -BCCI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X