பிளே ஆப் சுற்று கிடைக்குமா?
அதேபோல், இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்று களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆகவே, இந்த போட்டியில் பரபரப்பு நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை. ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் இரு மாற்றங்களுடன் ஆடுகிறது.
மாற்றங்கள் என்ன?
கேப்டன் ஸ்மித் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், மீண்டும் ரகானே கேப்டன் பொறுப்பேற்கிறார். ஸ்மித் மற்றும் உனட்கட் வெளியில் அமர்த்தப்பட்டு, இஷ் சோதி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் இன்றைய போட்டியில் ஆடுகின்றனர். டெல்லி அணியில் ஜெகதீசா சுசீத் மற்றும் கிரிஷ் மோரிஸ் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பதிலாக இஷாந்த் ஷர்மா மற்றும் கீமோ பால் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரகானே அவுட்
துவக்க வீரர்களாக லிவிங்ஸ்டனும், கேப்டன் ரகானேவும் களம் இறங்கினர். அதிரடியாக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரகானே அவுட்டானார். வெறும் 2 ரன்களில் இஷாந்த் பந்தில், தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 14 ரன்களில் அவுட்டானார். யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடிய சஞ்சு சாம்சன் ரன் அவுட்டானார்.
தொடர்ந்து அவுட்
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து அதிர்ச்சியில் இருந்த ராஜஸ்தானுக்கு மற்றொரு இழப்பாக, லோம்ரரும் ஆட்டமிழந்தார். 6 ஓவர்கள் முடிவதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டம் மிக முக்கியமான வாழ்வா? சாவா? ஆட்டமாகும். ஆனால் விக்கெட் வீழ்ச்சி அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.