ரஞ்சித்தின் ஐடியா இது
இந்த நிலையில் இப்படி ஒரு ஐடியாவைக் கூறியுள்ளார் ரஞ்சித். இப்போட்டித் தொடரை தள்ளி வைத்தபடி ஏப்ரல் 15ம் தேதி நடத்தலாமா அல்லது நிரந்தரமாக தள்ளிப் போடலாமா என்ற குழப்பத்தில் பிசிசிஐ ஏற்கனவே உள்ளது. இந்த ஆண்டின் கடைசிக்கு ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போடப்படலாம் என்ற ஒரு தகவலும் உலா வருகிறது. எதுவுமே இன்னும் முடிவாகாமல் உள்ளது.
இந்திய வீரர்களைக் கொண்டு நடத்தலாம்
முன்னதாக மார்ச் 29ம் தேதி இப்போட்டிகள் தொடங்குவதாக இருந்தன. ஆனால் லாக்டவுன் உள்ளிட்டவை காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிப் போட்டுள்ளனர். ஆனால் அதுவும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. காரணம் நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதால். இந்த நிலையில் ரஞ்சித் கூறுகையில், இந்திய வீரர்களை மட்டும் வைத்து போட்டித் தொடரை நடத்த நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இந்திய பிரிமீயர் லீக் என்ற பெயருக்கும் அது பொருத்தமாகவே இருக்கும் என்றார்.
அசாதாரண சூழல்
அணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த முடிவையும் எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது அசாதாரண நேரம்தான். பிசிசிஐ விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம். இந்திய வீரர்களை மட்டும் வைத்து போட்டியை இதுவரை நடத்த முடியாத நிலை இருந்தது. தற்போது முற்றிலும் இந்திய வீரர்களை மட்டும் வைத்து போட்டியை நடத்தக் கூடிய வாய்ப்புகள் வந்துள்ளன. எனவே இந்தப் போட்டித் தொடரை சுருக்கமாக நடத்தலாம் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார் ரஞ்சித் பர்தகுர்.
முடிவெடுக்குமா பிசிசிஐ
இந்த முடிவை பிசிசிஐதான் எடுக்க வேண்டும். அநேகமாக ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு இந்த முடிவை பிசிசிஐ எடுக்கலாம் என்று கூறியுள்ளார் ரஞ்சித். ஆனால் இதற்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. காரணம் இன்னும் சூழல் மாறாத நிலையில் பிசிசிஐ தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை எடுத்தால் அரசு அனுமதிக்குமா என்பது கேள்விக்குறி. அதை விட முக்கியமாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகவும் நேரிடும். மேலும் ரசிகர்கள் இல்லாமல் எப்படி போட்டியை நடத்துவது என்பதும் உள்ளது.