ஆந்திரா -விதர்பா அணிகள் மோதல்
இந்தியாவில் விளையாடப்படும் ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. இந்த போட்டிகளின் மூலம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு சாத்தியமாகின்றது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பையின் குரூப் ஏ போட்டி துவங்கியது.
3வது முறையாக கோப்பையில் கவனம்
இந்த போட்டியில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகள் மோதிய நிலையில், விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பைசல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இவர் மூன்றாவது முறையாக கோப்பையை கைபற்றும் முனைப்பில் உள்ளார். ஆயினும் ஆந்திர அணி, விதர்பாவிற்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாமதமான போட்டி
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மைதானத்திற்கு பாம்பு நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பு அங்கும் இங்கும் சென்ற நிலையில், இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
|
பிசிசிஐ உள்நாட்டு டிவிட்டரில் பகிர்வு
அங்கும் இங்கும் சென்ற பாம்பால் வீரர்கள் பதற்றம் அடைந்தனர். இதனிடையே, பாம்பு குறித்த இந்த விடியோ பிசிசிஐ உள்நாட்டு டிவிட்டரில் பகிரப்பட்டது.