ஸ்ரீதர்
ஸ்ரீதர் தனது பேச்சில், இந்திய அணிக்காக ரவி சாஸ்திரி நிறைய செய்து இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். கோலி நாடு திரும்பிய பின் அவருக்கு பதிலாக பேட்ஸ்மேனை இறக்காமல் ஜடேஜாவை இறக்கியது சாஸ்திரிதான். இப்படி சாஸ்திரி எடுத்த முடிவுகள் எல்லாமே இந்திய அணிக்கு பலம் சேர்த்தது.
இணையம்
ஆனால் அவருக்கு எதிரான இணையத்தில் தவறான கருத்து நிலவுகிறது. தன்னை பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பதை குறித்து சாஸ்திரி கவலைப்பட மாட்டார். இணையத்தில் வரும் விமர்சனங்களை பற்றி எல்லாம் ரவி சாஸ்திரி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்.
மீம்கள்
இந்த முறை மட்டுமல்ல இதற்கு முன் ரவி சாஸ்திரி தனது ஆலோசனைகள் மூலம் ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றி இருக்கிறார். ஆட்டத்தை மிக உன்னிப்பாக கவனித்து, முக்கியமான நேரத்தில் முடிவு எடுக்க கூடியவர்தான் ரவி சாஸ்திரி.
தவறான கருத்து
அவருக்கு கிரிக்கெட் குறித்தும், களம் குறித்தும் இருக்கும் அறிவு அளப்பரியது. அவரை குறைவாக எடை போட கூடாது. இணையத்தில் அவருக்கு எதிராக தவறான மீம்கள் போடப்படுகிறது. தேவையின்றி தவறான கருத்துக்கள் பகிரப்படுகிறது, என்று ஸ்ரீதர் குறிப்பிட்டு இருக்கிறார்.