புகைப்படம் ரிலீஸ்
இந்நிலையில் அங்குள்ள கடற்கரையில் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்ட ரவிசாஸ்திரி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
|
ஜூஸ் குடிக்கும் நேரம்
வெயில் வெயில் வெயில். இது ஜூஸ் அருந்தும் நேரம். கோகோ பே பாறைகள் நிறைந்து அழகாக இருக்கிறதுது. ஆன்டிகுவா என்று பதிவிட்டார். சாஸ்திரியின் புகைப்படத்தை உடனே நெட்டிசன்கள் கிண்டல் செய்தும், கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர்.
|
கேலி
காரணம் யாதெனில் மது பிரியரான ரவிசாஸ்திரி குடிப்பதற்காக அங்கு சென்று உள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்து அவர் படுத்து விடுவார் என்று கிண்டல் செய்தனர். ஒரு வாசகரோ, மிக பெரிய கண்ணாடி கோப்பையில் மது குடிப்பது போன்ற புகைப்படத்தை உலவ விட்டுள்ளார்.
போதை நபர்
மேலும் சிலர் உங்களது உடைக்கும், உடம்பிற்கும் சம்பந்தமே இல்லை மாற்றிக் கொள்ளுங்கள். பலர் அவர் மதுபானங்கள் மற்றும் சிகரெட் போன்றவற்றுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். ஒரு ரசிகர் போதையில் தள்ளாடி விடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மறந்துவிடாதீர்கள்
மற்றொரு ரசிகரின் கிண்டல் மாஸாக இருக்கிறது. உங்கள் உடல்தகுதியையும், வயிறையும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இந்திய கோச் என்பதை மறந்து விடாதீர்கள் என்று அவரை கேலி செய்துள்ளார். உங்க சிறந்த ஆடைகளை அணிய பழகிக் கொள்ளுங்கள் என்றார். இணையத்தில் ரவி சாஸ்திரியும், அவரை பற்றிய கிண்டல்களும் தான் இப்போது வைரல்.