டெஸ்ட் முக்கியத்துவம்
இதற்குக் காரணம் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் தமக்கு அழுத்தம் ஏற்படுவதாக பென்ஸ்டோக்ஸ் கூறினார். இதனால் கிரிக்கெட் போட்டிகளில் அட்டவணையை சரி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டெஸ்ட் கிரிக்கெட் தன்னுடைய முக்கியத்துவத்தை என்றுமே இழக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
ஏற்கனவே வீரர்கள் எந்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை தீர்மானித்து முடிவெடுத்து வருகிறார்கள் .தற்போது ஹர்திக் பாண்டியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடுகிறார். அது குறித்து அவர் தெளிவான முடிவில் இருக்கிறார். வேறு எதிலும் விளையாட அவர் விரும்பவில்லை. தற்சமயம் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுவதால் ஹர்திக் பாண்டியா ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
வீரர்களின் உரிமை
உலகக் கோப்பை முடிந்தவுடன் அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். இதேபோன்று வேறொரு வீரரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டு தேர்ந்தெடுத்து விளையாடுவார்கள். அது அவர்களுடைய உரிமை. ஐபிஎல் போன்ற தொடர்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் தங்களுக்கு என டி20 தொடர்களின் நடத்துகின்றன .
இது தான் எதிர்காலம்
நிலைமை அப்படி இருக்க உங்களால் எப்படி இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும். என்னை கேட்டால் இரண்டு நாடுகள் மோதிக் கொள்ளும் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை ஒரே அடியாக நிறுத்தி விட வேண்டும். அதுதான் சரியான வழி . அதேபோன்று அனைத்து வீரர்களும் அவர்கள் விரும்பும் படி எந்த நாட்டில் நடைபெறும் டி20 தொடரிலும் விளையாடலாம் என்று அறிவிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.