வெற்றிதான் முக்கியம்
டெஸ்ட் போட்டிகளை டிரா செய்வதற்காக கிரிக்கெட் மைதானத்துக்கு வரக்கூடாது. ஆட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையிலும், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் பாணியிலும் கிரிக்கெட்டை விளையாட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
20 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்குரிய சாத்தியக் கூறுகள் என்ன என்பதை வீரர்கள் சிந்திக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தொடங்குவது மிகவும் முக்கியமானதாகும்.
இனியும் பாடம் கற்க முடியாது
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களுடன் கற்று கொள்ளுதல் காலம் முடிந்து விட்டது. தற்போது இந்திய அணியினர் அதிக அளவில் அன்னிய மண்ணில் விளையாடுகின்றனர். அதில் கிடைக்கும் அனுபவங்களை, அதேபோன்ற சூழ்நிலையில் மீண்டும் விளையாடுகையில் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
20 விக்கெட்டுகளை வீழ்த்தனும்
கூடுதலாக ஒரு பவுலரை வைத்து இருப்பதால் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்றால் அந்த யுக்தியை பயன்படுத்துவதில் தவறில்லை. அதிக அளவில் ரன்கள் குவிப்பது மட்டுமின்றி, 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டியதும் வெற்றிக்கு இன்றியமையாதது.
ஆஷஸை பாருங்க..
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பந்து வீச்சில் இருக்கும் கூடுதல் பலம் தான் முக்கியமானதாகும் என்பது தெரிகிறது. கடந்த காலங்களில் இலங்கை அணியில் சிறந்த வீரர்கள் பலர் இடம் பிடித்து இருந்தனர்.
சவாலான தொடர்தான்..
அணியாக ஒருங்கிணைந்து விளையாடுவதில் அவர்கள் சிறப்பானவர்கள். நான் முதன்முதலாக இங்கு 1980-ம் ஆண்டில் வந்த போது இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அவர்களிடம் ஓரளவுக்கு நல்ல பந்து வீச்சு இருந்தது. அதன் பிறகு முரளிதரன் சுழற்பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இலங்கை அணி 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முரளிதரனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. மற்ற சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட முரளிதரன் தூண்டுகோலாக இருந்தார். அதனால் அந்த அணி உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவானது. இந்த தொடர் சவாலானதாகும்.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.