2000 விண்ணப்பங்கள்
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சுமார் 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதில் இருந்து ஐந்து பேரை தேர்வு செய்தனர். தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேரடியாக இறுதிச் சுற்று தேர்வுக்கு தகுதி பெற்றார்.
இறுதியாக ஆறு பேர்
ரவி சாஸ்திரி தவிர்த்து டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன், லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், பில் சிம்மன்ஸ் கடைசி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் பில் சிம்மன்ஸ் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.
தேர்வு செய்த மூவர்
மற்ற ஐந்து பேருக்கும் கபில் தேவ் தலைமையிலான மூவர் குழு நேர்முகத் தேர்வு நடத்தியது. அந்த குழுவில் கபில் தேவ் உடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெயிக்வாட் மற்றும் முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி இடம் பெற்று இருந்தனர்.
ரவி சாஸ்திரி வாய்ப்பு
இந்த தேர்வுக்கு பல நாட்கள் முன்பு இருந்தே ரவி சாஸ்திரி தான் மீண்டும் இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என பலமாக கூறப்பட்டது. பிசிசிஐ அதிகாரிகளே இதைக் கூறினர்.
பயிற்சியாளர்
அதே போல, ரவி சாஸ்திரி மீண்டும் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம், கேப்டன் விராட் கோலியின் ஆதரவு மற்றும் இந்திய அணி இவரது காலத்தில் பெற்ற ஏராளமான வெற்றிகள் தான்.
இந்திய அணியின் அடுத்த கட்டம்
இந்திய அணி அடுத்து 2020 டி20 தொடரில் விளையாட உள்ளது. அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. ரவி சாஸ்திரி டி20 உலகக்கோப்பைக்குப் பின் 2021 வரை இந்திய அணியுடன் பயணிப்பார் என தெரிகிறது.