கடந்த தொடர்களில் அதிரடி
ஐபிஎல் 2021 தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவந்த ஆர் அஸ்வின் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7 ரன்களையும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். கடந்த தொடர்களில் அதிரடியை வெளிப்படுத்தி அஸ்வினின் இந்த ஆண்டு ஐபிஎல் ஆட்டம் மெதுவாகவே இருந்தது.
ஐபிஎல்லில் இருந்து நீங்கிய அஸ்வின்
ஆயினும் அவர் எதிரணி பௌர்களின் ரன்களை சில போட்டிகளில் சுருக்கினார். தொடர்ந்து பார்மிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அணியிலிருந்து விலகினார். தன்னுடைய குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இந்த நேரத்தில் தன்னுடைய ஆதரவு தேவை எனவும் அவர் கூறியிருந்தார்.
அஸ்வின் பங்கேற்கிறார்
அவரது குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதித்திருந்தததாக அவரது மனைவி பின்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அஸ்வின் இறுதி கட்ட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அடுத்தகட்ட ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்தி முடிக்க ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரிசோதனைகள்
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் மீண்டும் இணையும் பட்சத்தில் அவர் மும்பையில் 7 நாட்கள் குவாரன்டைனை முடித்துவிட்டு கொரோனா டெஸ்ட்களிலும் தேற வேண்டும். இதையடுத்தே அவர் மீண்டும் அணியில் இணைந்து விளையாட முடியும்.
சிறப்பான டெல்லி அணி
கடந்த சீசனில் சிறப்பான போட்டிகளை டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடியது. கடந்த சீசனில் தான் அஸ்வினும் அணியில் இணைந்திருந்தார். இதையடுத்து முதல் முறையாக கடந்த சீசனில் அந்த அணி இறுதிப்போட்டி வரை விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த சீசனில் ரிஷப் தலைமையில் அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது.