சில தினங்களில் துவக்கம்
ஐபிஎல் 2021 போட்டிகள் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபிக்கு எதிராகவும் இரண்டாவது போட்டி மும்பையில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலும் நடைபெறவுள்ளது.
மும்பைக்கு மாற்றம்
இதையொட்டி சிஎஸ்கே தற்போது தனது பயிற்சி முகாமை சென்னையிலிருந்து மும்பைக்கு மாற்றியுள்ளது. ஹோம் அட்வான்டேஜ் இல்லாததும் இந்த மாற்றத்திற்கு காரணம். இதையொட்டி நாளை மறுதினம் முதல் மும்பையில் தனது பயிற்சிகளை மீண்டும் துவக்கவுள்ளது சிஎஸ்கே.
தெளிவில்லை என ஆதங்கம்
முன்னதாக குவாரன்டைனிலும் அணிவீரர்கள் ஈடுபட உள்ளனர். இதையொட்டி அணி வீரர்கள் அம்பத்தி ராயுடு, தோனி, ருதுராஜ் ஆகியோரும் புஜாரா, ரெய்னா உள்ளிட்டோரும் மும்பை சென்றுள்ளனர். இதனிடையே அணியில் ரவீந்திர ஜடேஜா இணைவது குறித்த தெளிவில்லை என்று இரு தினங்களுக்கு முன்பு அதன் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.
சிஎஸ்கேவில் இன்று இணைகிறார்
இந்நிலையில் என்சிஏவில் தனது பிட்னஸ் சான்றிதழை ஜடேஜா பெற்றுள்ளதாகவும், இன்றைய தினம் அவர் மும்பையில் சிஎஸ்கே அணியில் இணையவுள்ளதாகவும் காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடதுகை கட்டைவிரல் காயம்பட்ட ஜடேஜா, இரு மாதங்களாக என்சிஏவில் பயிற்சி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.