ஐபிஎல் பணிகளும் ஜரூர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான போட்டித் தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் 2021 தொடருக்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடைபெற்று வருகிறது.
விரைவில் அறிவிப்பு
ஐபிஎல் 2021 தொடர் துவங்கும் தேதி மற்றும் இடம் குறித்து இன்னும் பிசிசிஐ இறுதி முடிவெடுக்கவில்லை. மாறாக கொரோனா தாக்கம் இந்தியாவில் தொடரும் நிலையில் இங்கேயே ஐபிஎல் நடக்குமா அல்லது யூஏஇயில் நடத்தப்படுமா என்பது என்பது குறித்து விரைவில் திட்டமிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறப்பான வரவேற்பு
இந்நிலையில் வரும் 8, 9 தேதிகளில் ஐபிஎல் தொடரையொட்டி சிஎஸ்கே தனது பயிற்சி போட்டிகளை சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதையொட்டி அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்களும் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர்.
பயிற்சியை துவக்கிய ஆர்சிபி
இதனிடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணி தனது பயிற்சி போட்டிகளை நேற்று முதலே துவங்கியுள்ளது. அணியின் முக்கிய வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் ஹர்சல் படேல், ரஜட் படேடார், ஷாபாஸ் அகமது மற்றும் சுயூஸ் பிரபுதேசாய் ஆகியோர் தங்களது பயிற்சிகளை துவங்கியுள்ளனர்.