எகிறிய ரன்கள்
இப்போட்டியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், பும்ரா ஓவரில் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேற, ஆர்சிபி-க்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. எனினும், 2வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், மும்பை பவுலர்களை தண்ணீர் கொடுக்க வைத்தனர். இருவரும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என்று விளாச, ரன்கள் ராக்கெட் வேகத்தில் எகிறியது. பிறகு ராகுல் சாஹர் ஓவரில் பரத் 32 ரன்களில் அவுட்டாக, மூன்றாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கினார்.
டி வில்லியர்ஸ் - மேக்ஸ்வெல்
கடந்த சில போட்டிகளில் தடுமாறிய மேக்ஸ்வெல், இன்று சில பல சிக்ஸர்களை பறக்கவிட ரன்கள் டீசண்ட்டாக வந்து கொண்டிருந்தது. இடையில் அரைசதம் அடித்த விராட் கோலி, 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டாக, பிறகு டி வில்லியர்ஸ் - மேக்ஸ்வெல் ஜோடி இணைந்தது. இருவரும் மும்பை பந்துவீச்சை விளாசித் தொடங்கினர். மேக்ஸ்வெல் 33 பந்தில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். பெங்களூரு 18 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. பிறகு, மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் கேட்ச் ஆனார். அதற்கு அடுத்த பந்திலேயே, 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த டி வில்லியர்ஸும் அவுட்டானார். எனினும், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
வெற்றிப்பாதை கிடைக்குமா?
புள்ளிப்பட்டியலில், மும்பை 9 போட்டிகளில் 4ல் மற்றும் வெற்றிப் பெற்று, 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. அதேசமயம், பெங்களூரு அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் வாய்ப்பு மோதலில் மும்பை அணிக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும். கடைசி நேர சிக்கல்களை தவிர்க்க, இதில் மும்பை அணி வெற்றிப் பெறுவது அவசியமாகும். அதேபோல், இந்த இரண்டாவது லீக்கில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணி, இப்போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டியதும் அவசியமாகும்.
|
ராகுல் சாஹர் கோபம்
இந்த போட்டியில் மிக சுவாரஸ்யமாக விஷயம் ஒன்றும் அரங்கேறியது. இதில், அதிரடியாக விளையாடி வந்த பெங்களூரு விக்கெட் கீப்பர் பரத், மும்பை ஸ்பின்னர் ராகுல் சாஹர் ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதேசமயம், அவர் ஓவரில் அவுட்டும் ஆனார். அப்போது, தனது உச்சக்கட்ட கோபத்தை பரத்தை நோக்கி வெளிப்படுத்தினார் ராகுல். இதனை மறுமுனையில் நின்றுக் கொண்டிருந்த விராட் கோலியும் ஒருவித சிரிப்பான் எக்ஸ்பிரஷனோடு பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில், கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ராகுல் சாஹர் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.