5 பந்துகளில் 10 ரன்கள்
கடைசி ஓவரில் பெங்களூரு அணி வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால், 5 பந்துகளில் 10 ரன்களை டுபே, டி வில்லியர்ஸ் ஜோடி சேர்த்துவிட்டது. கடைசி பந்தை மலிங்கா வீச அதை டுபே அடிக்கமுடியாமல் போனதால் பெங்களூரு தோற்றது.
பெரிய திரை
போட்டி முடிந்த சில நிமிடங்களில் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் மலிங்கா பந்துவீசுவது ரீப்ளை செய்து காண்பிக்கப்பட்டது. அதில் மலிங்கா நோபால் போட்டிருப்பது நன்றாக தெரிய... வெடித்தது சர்ச்சை.
எதிர்பார்த்த ரசிகர்கள்
அதை பார்த்த நடுவர்கள், மீண்டும் விளையாட வீரர்களை அழைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களோ போட்டி முடிந்தவுடன் சென்றுவிட்டனர். நோபாலாக அறிவித்து ப்ரீஹிட் கொடுத்திருந்தால், முடிவே மாறியிருக்கும்.
உயர்தர ஐபிஎல்
போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த கோலி கோபத்துடன் பதில் அளித்தார்.அவர் கூறியதாவது:நாங்கள் உயர்தரமான ஐபிஎல் போட்டியை சர்வதேச அளவில் விளையாடுகிறோம், கிளப் லெவலில் விளையாடவில்லை.
கண்களை திறங்கள்
நடுவர்கள் கண்களை திறந்து வைத்து கொண்டு கண்காணிக்க வேண்டும். மலிங்கா வீசியது எவ்வளவு பெரிய நோபால், அதை கவனிக்காமல் இருந்துள்ளனர். நடுவர்கள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.