2003ல் நடந்த சம்பவம்
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் 2003ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை நினைவு கூர்ந்து ரசிகர்களை மேலும் பரபரப்புக்கு கொண்டு போயிருக்கிறார் ஹர்பஜன் சிங். அவரும் பாகிஸ்தானின் முகமது யூசுப் ஆகியோர் முள்கரண்டியை வைத்து சண்டையிட்ட சம்பவம் தற்போது வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.
விளையாட்டு வினையானது
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது:உலக கோப்பை தொடரின் போது, விளையாட்டாக ஆரம்பித்த சம்பவம் வினையாக முடிய இருந்தது. அதாவது, 2003ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் விளையாடும் லெவனில் இல்லை. கும்ளே தான் அப்போது அணியில் இடம் பெற்றிருந்தார்.
பஞ்சாபி பேசுவோம்
உணவு இடைவேளையின் போது நான் டேபிளில் அமர்ந்திருந்தேன். அப்போது யூசுப்பும், அக்தரும் அதே இடத்தில் அமர்ந்திருந்தனர். நானும், யூசுப்பும் பஞ்சாபி பேசுவோம். திடீரென இருவரும் காலை பிடித்து இழுத்துக்கொண்டோம்.
மதம் பற்றி பேச்சு
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. யூசுப் எனது சொந்த விஷயம் குறித்தும், எனது மதம் குறித்தும் பேசினார். அதற்கு அவரது மூக்குடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்தேன்.
தாக்க தயாரானேன்
ஆத்திரம் பொங்கியது. ஒரு கட்டத்தில் இருவரும் டேபிளில் இருந்த முள் கரண்டியை எடுத்து கொண்டு தாக்க இருவரும் தயாரானோம். சண்டை பெரிதாகும் முன் என்னை டிராவிட், ஸ்ரீநாத் ஆகியோர் இழுத்து சென்றனர்.
16 ஆண்டுகள் ஆனது
வாசிம், சயீத் அன்வர் யூசுப்பை அழைத்து சென்றனர். அப்போது ஆக்ரோஷமான சண்டையாக இருந்தது. தற்போது 16 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது யூசுப்பை பார்த்தால் அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இருவரும் சிரித்து கொள்வோம் என்றார்.