அறிக்கை, ஓய்வு
இந்நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஒருநாள், டி 20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவேன்.
வாய்ப்பு அளிக்கிறேன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. அதற்காக பாகிஸ்தான் அணியில் பல நல்ல பவுலர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும். அதனால் நான் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வை பெறுகிறேன் என்று கூறியிருந்தார்.
நிர்வாகம் அதிர்ச்சி
இளம் வீரரின் இந்த அதிரடி முடிவு, பாகிஸ்தான் அணி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்களும் அவரது முடிவால் அதிருப்தி அடைந்தனர். முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அணியின் நலனை கருத்தில் கொண்டு முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
வேண்டுகோள்
இந்நிலையில், முகமது அமீர், டெஸ்ட் ஓய்வு முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
அவசியம் தேவை
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முடிவை அமீர் கண்டிப்பாக மறுஆய்வு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர் பாகிஸ்தான் அணிக்கு தேவை. நாட்டிற்காக சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஜாம்பவான் என்ற பெயரை எடுக்க முடியும்.
என்னமோ நடக்கிறது
கவன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினால் யாரும் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். முகமது அமிர் முடிவை ஹசன் அலியும் பின்பற்றக்கூடும். ரியாஸ், ஜூனைத்கான் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.