என்ன காரணம்
ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி சொதப்பியதை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். ஆனால் அந்த விவகாரத்தில் ஜடேஜாவுக்கும் - சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இனி அந்த அணியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியானது.
ஜடேஜாவின் செயல்
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜடேஜா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து சிஎஸ்கே தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கினார். குறிப்பாக சிஎஸ்கேவில் மேலும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்ற போட்டிருந்த பதிவையும் நீக்கினார். இதே போல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோவில் ஜடேஜா மட்டும் இடம்பெறாமல் போனது.
ட்ரேடிங் விண்டோ
இந்நிலையில் ஜடேஜா வெளியேறுவது உறுதியாகியுள்ளது. அதாவது ட்ரேடிங் விண்டோ மூலம் தன்னை எடுக்க விரும்பும் அணிகள் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என ஜடேஜா கூறியுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலும் மும்பை அணிக்கு அவர் செல்வார் எனத்தெரிகிறது.
ஐபிஎல் விதிகள்
இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் விதிகளின் படி ஒரு வீரரால், தன்னை ட்ரேடிங் விண்டோவில் எடுத்துக்கொள்ளுங்கள், நான் விலகுகிறேன் எனக்கூற முடியாது. சம்மந்தப்பட்ட அணி நிர்வாகம் தான் வீரரின் பெயரை அறிவித்து ட்ரேடிங்கில் மாற்ற வேண்டும். எனவே இதற்காக சிஎஸ்கே நிர்வாகம் விரைவில் ஜடேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.