தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு வரும் டிசம்பர் 9ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.அங்கு வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் விளையாடவிருந்தது. இதற்காக ஓய்வில் இருந்த வீரர்களும் அழைக்கப்படவிருந்தனர். ஆனால் ஓமிக்ரான் குறித்த முடிவு எடுக்க வேண்டும் என்பதால் சுற்றுப்பயணம் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் வீரர்கள் தேர்வையும் பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.
தேதிகள் மாற்றம்
தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரானின் தாக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து பிசிசிஐ சார்பில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 16ம் தேதி நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி முதல் தான் போட்டிகள் தொடங்கவுள்ளது.
போட்டி எண்ணிக்கை
இதன் மூலம் தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 போட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. இதனால் வீரர்களுக்கு பயிற்சி எடுக்க கால அவகாசமும், போட்டி தொடரை விரைவாக முடிக்கவும் முடியும்.
Recommended Video
வீரர்கள் மறுப்பு
இது ஒருபுறம் இருக்க தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி செல்லுமா என்பதிலேயே பிரச்னை நிலவி வருகிறது. திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் நடக்கும் என பிசிசிஐ கூறினாலும், அங்கு செல்ல இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அணிக்குள்ளேயே கார சார விவாதங்கள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.