சௌதாம்ப்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 273 ரன்களை குவித்து முதல் இன்னிங்சில் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
ரிஷப் பந்த் கடந்த போட்டியில்,டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது ரன்னை சிக்ஸராக அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.