கட்டாக்: சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுடைய சாதனைக்கு ரிஷப் பண்டால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் படைத்து வருகிறார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் இளம் வயதில் முச்சதம், அதிவேக சதம் போன்ற சாதனைகளை படைத்த அவர் தற்போது தென்னாப்பிரிக்கா தொடரில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
ரிஷப் பண்ட் கேப்டன்ஷியில் குறைகள் இருந்தாலும், அவரது பேட்டிங்கில் குறை சொல்ல முடியாது. முதல் ஆட்டத்தில் கூட குறைந்த பந்தில் 29 ரன்கள் விளாசி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு, கேப்டனாக முதல் வெற்றியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட் மீது பாக். முன்னாள் வீரர் விமர்சனம்.. பதிலடி கொடுத்த புவனேஸ்வர் குமார்.. காரணமே வேறு
இந்த நிலையில், ரிஷப் பண்ட் இன்று ஒரு புதிய உலக சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்தார். அவர் 25வது வயதில் படைத்திருந்த சாதனை, 25 ஆண்டுகளாக யாராலும் தொட முடியாமல் உள்ளது.
இந்த நிலையில், 24 வயது 251 நாட்களே ஆன ரிஷப் பண்ட் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 99 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் ஒரு சிக்சர் அடித்தால் , சச்சினின் இந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார். இதனால் சச்சினை போல் ரிஷப் பண்ட்க்கும் நல்ல எதிர்காலம் காத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.