2வது டி20
இந்திய அணியின் பேட்டிங்கின் போது திடீரென மைதானத்திற்கு பாம்பு வந்து இடையூறு செய்தது. இதன்பின்னர் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் போது திடீரென மின் விளக்குகள் வேலை செய்யாமல் போனதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதனையெல்லாம் விட பெரிய சம்பவம் ஒன்றும் 2வது டி20ல் அரங்கேறியுள்ளது.
சுவாரஸ்ய நிகழ்வு
தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் முதல் ஓவரை தீபக் சஹார் வீச தெம்பா பவுமா ஸ்ட்ரைக்கில் இருந்தார். அந்த ஓவரின் 4வது பந்தை அவுட் சைட் ஸ்விங் செய்ய, பவுமா அதனை அடிக்க முடியாமல் தவறவிட்டார். ஆனால் பந்து எதிர்பார்த்ததை விட அதிகம் ஸ்விங் ஆனதால், பின்னால் நின்றிருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டைவ் அடித்தும் கூட பிடிக்க முடியவில்லை.
ஜஸ்ட் மிஸ்
கேட்ச் பிடிக்க முயன்றபோது ரிஷப் பண்ட்-ன் கையில் பட்ட பந்து, அருகில் ஸ்லிப்-ஆக நின்றிருந்த ரோகித் சர்மாவின் அந்தரங்க உறுப்பின் மீதே "படார்" என படவிருந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் சற்று குனிந்து இருந்ததால் அடிவயிற்றில் பட்டது. இதனால் சிறிய வலியுடன் ரோகித் சர்மா தப்பித்தார்.
That oops moment #INDvSA 😬
— Shubhankar Mishra (shubhankrmishra) October 2, 2022
Feat. #RohitSharma & #rishabhpant pic.twitter.com/xXTuik09sF
ரசிகர்களின் கவலை
டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் வேளையில் இந்திய அணியில் பும்ரா, ஷமி, ஹர்ஷல், ஜடேஜா என அனைத்து முக்கிய வீரர்களும் காயத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் ரோகித் சர்மாவுக்கு ஏதேனும் ஆகியிருந்தால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக சென்றிருக்கும்.