இந்தியாவுக்கு நெருக்கடி
இதனையடுத்து, அணியை மீட்கும் முயற்சியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் ஈடுபட்டனர். தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஸ்டம்புகளை குறிவைத்து வீசி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர். இந்த நிலையில், டெஸ்டில் தனது இடத்தை நிரூபித்த ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டியில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ODI தடுமாற்றம்
இந்தப் போட்டிக்கு முன்னர் வரை ரிஷப் பண்ட் 19 போட்டிகளில் மட்டும் விளையாடி 545 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.வெறும் 3 அரைசதம் தான் அடித்திருந்தார். டெஸ்டில் 4 சதம் விளாசிய ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடித்தது இல்லை. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ரிஷப் பண்ட் இன்றைய ஆட்டத்தில் விளையாடினார்
சிக்சர்
தென்னாப்பிரிக்காவின் நெருக்கடியை உடைக்கும் விதமாக ரிஷப் பண்ட் பளார் என சிக்சர் அறைந்தார். இதன் பின்னரும் தென்னாப்பிரிக்கா தங்கள் மீது அழுத்தத்தை செலுத்த ரிஷப் பண்ட் அனுமதி அளிக்கவில்லை. சுழற்பந்துவீச்சாளர்களின் லைன்களை கெடுக்கும் விதமாக பவுண்டரிகளை விரட்டினார்
ரிஷப் பண்ட் 85
கே.எல்.ராகுலும் தன் பங்கிற்கு பவுண்டரிகள் விளாச, இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மீது சேர்த்தது. ரிஷப் பண்ட் 10 பவுண்டரிகள், 2சிக்சர்கள் விளாசினார். இதனார் ரிஷப் பண்ட் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் அடிச்ச அதிகபட்ச ஸ்கோராகும்.