தோல்விக்கான காரணம்
கேப்டன் பெவுமாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக கேசவ் மகாராஜ் போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து பேசினார். எங்களுடைய பிரச்சினையே பேட்டிங் தான். தொடர்ந்து 2 போட்டிகளாக பேட்டிங் இறுதியில் நாங்கள் ரன் அடிக்கவே இல்லை,நாங்கள் திட்டமிட்டப்படி ஏதும் செய்யவில்லை. பவர்பிளே முடிந்ததும் எங்களுக்கு எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை.
இந்தியாவுக்கு பாராட்டு
இந்திய அணி பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் கலக்கினார். இனி நாங்கள் வகுத்த திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் சுழற்பந்துவீசுவது கடினம் தான், மைதானத்தின் அளவு எல்லாம் சிறியதாக இருக்கும். பெங்களூரு போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதில் அனல் பறக்கும் என நம்புகிறேன்.
Recommended Video
காமெடி பண்ண ரிஷப்
வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், நல்ல கிரிக்கெட் ஆடுவது குறித்தும் கவனம் செலுத்தினோம். அதனால் எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைத்துவிட்டது. எந்த அணி நன்றாக விளையாடுகிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். தொடர்ந்து 4 போட்டியில் டாஸை இழந்துவிட்டேன். அடுத்த முறை வலது கையில் டாஸ் போட்டு வெற்றி பெற முயற்சிப்பேன்.
பேட்டிங்கில் கவனம்
தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்கள். தினேஷ் கார்த்திக் தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு அதிரடி காட்டி எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். அணியில் தற்போது இருக்கும் ஒரே குறை, என்னுடைய பேட்டிங் மட்டும் தான், கடைசி போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.