ரோகித் சாதனை
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் டி20 போட்டியில் சொந்த மண்ணில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ரோகித் சர்மா 16 போட்டியிலும், இங்கிலாந்து கேப்டன் மார்கன் 15 போட்டியிலும், வில்லியம்சன் 15 போட்டியிலும் வென்றுள்ளனர். இதே போன்று சொந்த மண்ணில் அதிக டி20 போட்டியில் வென்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார்.
குறைசொல்ல முடியாது
இந்த நிலையில், வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா, இது அணிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்ல விரும்பவிவல்லை. எதாவது ஒருநாள் இது போன்று நடக்கலாம். ஆனால் முதல் 15 ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி கட்டுப்படித்தினார். ஆனால், கடைசி 5 ஓவர்கள் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
பாராட்டு
எங்கள் நடுவரிசை வீரர்களின் செயல்பாடு பாராட்டுத்தக்கும் வகையில் அமைந்ததுள்ளது. தொடர்ந்து அவர்கள் ஜொலித்து வருகின்றனர். கடைசி வரை ஒரு பேட்ஸ்மேன் நின்றால் சேஸிங் எளிதாகிவிடும் என நினைத்தேன். அதே போல், ஸ்ரேயாஸ் நின்றார். ஜடேஜா முதல் பந்திலிருந்ரே அதிரடியை காட்டினார். பொறுப்புகளை அவர்களே எடுத்து கொண்டு பணியை முடித்தது திருப்தி அளிக்கிறது.
வாய்ப்பு வரும்
சஞ்சு சாம்சன் திறமையான வீரர். அவர் போன்ற வீரருக்கு இது போன்று வாய்ப்பு வழங்குவது அவசியம். மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். ஞாயிற்றுகிழமை நடைபெறும் கடைசி போட்டியில் நான் விளையாடுவேனா இல்லையா என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.