For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இடத்திற்காக 3 பேர் போராட்டம்.. மிடில் ஆர்டரால் தலைசுற்றி நிற்கும் ரோகித்.. கடின முடிவை எடுப்பாரா?

டாக்கா: வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தோல்வியுடன் திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை வங்கதேசத்தின் டாக்கா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும்.

ஆசியக் கோப்பை.. பிசிசிஐ அரசியல் புரிகிறது.. இடத்தை மாற்றினால் பாக். வெளியேறும்.. ரமீஸ் ராஜா ட்விஸ்ட் ஆசியக் கோப்பை.. பிசிசிஐ அரசியல் புரிகிறது.. இடத்தை மாற்றினால் பாக். வெளியேறும்.. ரமீஸ் ராஜா ட்விஸ்ட்

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றவர்கள் ஓய்வில் இருந்து திரும்புகின்றனர். 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை என்பதால் தற்போது இருந்தே முழு வீச்சில் தயாராக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த ப்ளேயிங் 11களை முயற்சி செய்து பார்ப்பார்கள்.

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

இந்நிலையில் ப்ளேயிங் 11ல் மிடில் ஆர்டரில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. ஓப்பனிங்கில் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டிற்கு மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஷிகர் தவான் தான் மற்றொரு இடத்திற்கு முதன்மை தேர்வாக இருக்கிறார். துணைக்கேப்டனான கே.எல்.ராகுல் அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்பதால் அவர் மிடில் ஆர்டருக்கு செல்வார் என தெரிகிறது.

ரிஷப் பண்ட்-ன் வாய்ப்பு

ரிஷப் பண்ட்-ன் வாய்ப்பு

ஆனால் அதில் தான் குழப்பமே உள்ளது. முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி விளையாடினால், 2வது விக்கெட்டிற்கு கே.எல்.ராகுல் விளையாடுவார். 3வது விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் கடைசியாக 9 இன்னிங்ஸில் 6 முறை அரைசதம் அடித்துள்ளார். ஆனால் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்குமே வாய்ப்பு கொடுத்தால் ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறுவது சந்தேகம் தான்.

பவுலிங் தேர்வுகள்

பவுலிங் தேர்வுகள்

ஏனென்றால் ரிஷப் பண்ட்-ஐயும் அணியில் சேர்த்தால் மொத்தமாக 6 ப்யூர் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். இதனால் 5 பவுலர்களுடன் மட்டுமே களமிறங்க வேண்டியிருக்கும். நியூசிலாந்து தொடரில் 5 பவுலர்களுடன் சென்ற போது, இந்தியா மோசமாக அடி வாங்கியதை அனைவரும் அறிவோம். எனவே பண்ட்-ன் இடத்திற்கு ஒரு ஆல்ரவுண்டரை கொண்டு வர யோசித்து வருகிறார்கள். இதனால் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோரின் இடங்களை நிரப்ப ரோகித் சிரமப்பட்டு வருகிறார்.

Story first published: Saturday, December 3, 2022, 9:27 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
Rohit sharma in confusion over selecting 3 places in Middle order of Team Playing 11 for 1st ODI against bangladesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X