த்ரில் ஓவர்
கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில், பெங்களூரு அணி 13 ரன்களை மட்டும் எடுத்தது. இதையடுத்து மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி
ஆனால் மலிங்கா வீசிய கடைசி பந்தை டுபே எதிர்கொண்டார். அதில் அவர் ஒரு ரன் மட்டுமே எடுக்க, மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ரீப்ளேவில் நோபால்
ஆனால் அந்த கடைசி பந்தை ரீப்ளேவில் பார்த்த போது விஷயமே வேற மாறி இருந்தது. மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி அம்பயர்களிடம் கேட்டார்.
கடும் விமர்சனம்
அப்போது, போட்டி முடிவை மாற்ற முடியாது என்று அம்பயர்கள் தெரிவித்ததால், கோலி கடுப்பானார். கடுமையாக அவர்களை விமர்சித்தார். இந்நிலையில் பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, கடைசி பந்து நோ பால் என்பதை கவனிக்காதது வேதனையாக உள்ளதாக நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.
யாரும் கூறவில்லை
இது குறித்து அவர் பேசியதாவது: என்னிடமும் யாரும் வந்து அது நோபால் என்று கூறவில்லை. நாங்களும் அதை கவனிக்கவில்லை. மைதானத்தை விட்டு வெளியில் இருப்பவர்களால் அனைத்தையும் டிவி மூலம் பார்க்க முடியும்.
நல்லது அல்ல
ஆனால் எங்களால் அது முடியாது. நாங்கள் எதையும் வேண்டுமென்றே செய்ய வில்லை. இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இது போன்ற செயல்கள் விளையாட்டிற்கும் நல்லது அல்ல.
வேறு வழியில்லை
அது ஆட்டத்தின் கடைசி பந்து என்பதால் பெங்களூர் அணி வீரர்களுடன் , நாங்கள் கை கொடுத்துவிட்டு செல்வதை விட வேறு வழி இல்லை. பும்ரா, மலிங்கா உள்பட அனைத்து வீரர்களும் சிறந்த முறையில் விளையாடினர் என்று கூறினார்.