தோனி நீக்கப்பட்டார்
தோனி ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்கினாலும், பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை. எனினும், அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான் இந்திய அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டு இருந்தார்.
நீக்கியதற்கு என்ன காரணம்?
இது தோனி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும், தோனி 2020 டி20 உலகக்கோப்பை வரை ஆட மாட்டார் என்பதால் அவரை நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் வந்தன.
தோனி இல்லாதது இழப்பு
இந்த நிலையில் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் வெற்றிக்கு பின் தோனியை இல்லாதது பெரிய இழப்பு என கூறியுள்ளார். ஏற்கனவே, தோனி இல்லாமல் இலங்கையில் நிதாஸ் ட்ராபியில் ரோஹித் இந்திய அணிக்கு தலைமை ஏற்றார். அதில் வெற்றியும் பெற்றார். அதை நினைவு கூர்ந்த ரோஹித், தோனி இல்லாதது தனக்கு மட்டுமில்லாமல், இளம் வீரர்களுக்கும் இழப்பு தான் என குறிப்பிட்டார்.
பாசக்கார ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா எப்போதும் தோனியை ஆதரிக்கத் தவறியதில்லை. கேப்டன் பதவி ஏற்கும் போது, போட்டிகளின் போது பல முறை தோனியின் அறிவுரையை கேட்டு முடிவு எடுப்பதை நாம் பார்த்திருப்போம். தோனி டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அவரை நினைவு கூர்ந்துள்ளார் பாசக்கார ரோஹித்.