சமூக வலைதளத்தில் பரபர
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் துணை கேப்டனாக உள்ளவர் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ள ரோகித் சர்மாவிற்கு இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் பாலோயர்களும் டிவிட்டரில் 16.5 மில்லியன் பாலோயர்களும் உள்ளனர்.
தரவரிசையில் 2வது இடம்
ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சத சாதனையை தன்னுடைய கைகளில் கொண்டுள்ள ரோகித் சர்மா, இந்த வடிவத்தில் ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளார். கடந்த 2007ல் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய ரோகித் சர்மா, இதுவரை 224 போட்டிகளில் விளையாடி 9,115 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 49.27 மற்றும் 29 சதங்களையும் அவர் அடித்துள்ளார்.
டெஸ்ட்டில் 32 போட்டிகள்
இதேபோல டி20 வடிவத்தில் 108 போட்டிகளில் விளையாடி, 2,773 ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா. இதன் சராசரி 32.62. மேலும் டி20 வடிவத்தில் மற்ற வீரர்கள் செய்யாத அளவில் 4 சதங்களையும் அடித்துள்ளார். மேலும் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,141 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் இவர் கைவசம் உள்ளன.
ரசிகரின் கைவண்ணம்
விராட் கோலியை அடுத்ததாக சமூகவலைதளங்களில் ரோகித் சர்மாவிற்கு மிகச்சிறந்த அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில், டிவிட்டர் மூலம் ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவின் ஓவியத்தை வரைந்து பகிர்ந்துள்ளார். மேலும் ரோகித்தையும் டேக் செய்துள்ளார். இந்த ஓவியம் குறித்த கருத்துக்களை பகிரவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.