பொறுமையான ஆட்டம்
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மைதானத்தில் நிதானமாக நின்று விளையாடுவார். இதனால் அவரை எளிதில் வீழ்த்துவது எதிரணியினருக்கு சவாலாக அமைந்து விடுகிறது. இந்த திறமையே அவர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க காரணமாகவும் அமைந்துள்ளது. அவர் பொறுமையுடன் விளையாடுவதாக அவர் மீது குற்றச்சாட்டையும் இந்த அவரது குணமே அவருக்கு பெற்றுத் தருகிறது.
வெற்றிக்கு ரகசியம்
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் கிரீசில் நின்று நிதானமாக விளையாடுவதே ரோகித் சர்மாவின் வெற்றிக்கான காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். பலவித திறமைகளை ரோகித் சர்மா பெற்றிருந்தாலும், இந்த நிதானமான எளிதில் அவுட் ஆகாத அவரது திறமையே முக்கியமான அவரது திறமையாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
திறமை வெளிப்படாது
இவ்வாறு இல்லாமல் உடனடியாக அவுட் ஆனால், அங்கு எந்தவிதமான திறமையும் செயல்படாது என்றும் கோவர் தெரிவித்துள்ளார். இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்தனேவும் இத்தகைய திறமை மிக்கவர் என்று தெரிவித்துள்ள கோவர், நீண்ட நேரம் நின்று ஆடினால் மட்டுமே உங்களால் ரன்களை குவிக்க முடியும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். இதன்மூலம் மட்டுமே ரசிகர்கள் உங்களை கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.
எதிர்மறை கமெண்டுகள்
இவ்வாறு அவுட் ஆகாமல் நீண்ட நேரம் நின்று விளையாட, அந்த ஆட்டத்தின்பால் தீவிரம், திறன், தொழில்நுட்பம் சார்ந்த அறிவு, நிதானம், கவனம் போன்றவை இருக்க வேண்டும் என்றும் கோவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திறமையே எதிர்மறையான கமெண்ட்டுகளையும் பெற்றுத் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முயற்சிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது
நீண்ட நேரம் நின்று விளையாடாமல் போனால், அக்கறை மற்றும் கவனம் இல்லாமல் விளையாடியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழும் சூழல் உருவாகும் என்றும் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். பவுண்டரிக்கு முயற்சி செய்து அவுட் ஆகும் நேரங்களில், நாம் முயற்சி செய்யவில்லை என்று அர்த்தமில்லை. மாறாக அந்த முயற்சி பலிக்கவில்லை என்றே அர்த்தம் என்றும் கோவர் கூறியுள்ளார்.