3வது டி20 போட்டி
அந்த அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 117 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்தது. எனினும் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் 54 ரன்களும், டேனியல் சாம்ஸ் 28 ரன்களும் குவித்து ஆஸ்திரேலிய அணியை 186 ரன்களுக்கு உயர்த்தி சென்றனர்.
இந்திய அணி வெற்றி
கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 1 ரன்னுக்கும், ரோகித் சர்மா 17 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி (63), சுர்யகுமார் யாதவ் 69 ரன்களும் விளாசி இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 25 ரன்களை குவித்ததால் 19.5 ஓவர்களில் இந்தியா 187 ரன்களை எட்டி வெற்றி கண்டது. இதன் மூலம் தொடரையும் 2 - 1 என கைப்பற்றியது.
ரோகித் பேச்சு
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், இந்த 3 போட்டிகளிலும் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றிக்கு உதவினார்கள். இது இந்தியாவின் பேட்டிங் பலத்தை காட்டுகிறது. ஆனால் பந்துவீச்சில் பிரச்சினை அப்படியே உள்ளது.
பவுலிங்
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் காயத்தில் மீண்டு வந்தப் பிறகு சிறப்பாக செயல்படவில்லை. அவர்கள் செட்டில் ஆவதற்கு இன்னும் நேரம் தேவை எனத்தெரிகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.