அபராதம்
இதற்காக தோனிக்கு தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டது. அதே போல, போட்டி முடிந்த பின் தோனி விதிமீறலில் ஈடுபட்டதற்காக போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது.
தோனிக்கு ஆதரவு
மேலும், இந்த விவகாரத்தில் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள், பத்திரிக்கைகள் கருத்து தெரிவித்து இருந்தன. அம்பயர்கள் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தவறு செய்து வருவதாக கூறி, தோனி செய்தது சரிதான் என கூறினர்.
ஏமாற்றம்
இதைக் கண்ட முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி, தோனி ஆடுகளத்துக்குள் அத்துமீறி நுழைந்து, முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொண்டது குறித்த செய்திகள் தனக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறி இருந்தார்.
வெட்கமே இல்லாமல்…
மேலும், வெட்கமே இல்லாமல் தோனிக்கு வெறும் 50% அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? அது சிறு பிள்ளைத்தனமானது என பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் பிஷன் சிங் பேடி. நட்சத்திர வீரர் என்பதற்காக தோனிக்கு இந்த விஷயத்தில் ஆதரவு கிடைத்துள்ளதை தான் இவர் இப்படி காட்டமாக கூறி இருக்கிறார்.